;
Athirady Tamil News

இலங்கை போன்ற சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் – பகிரங்க எச்சரிக்கை !!

0

இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறை வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கட்சி ஊழியர்களுடன் காணொளி வாயிலாக இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

”இது ஒரு எச்சரிக்கை அல்ல, இது எனது பகுப்பாய்வு.

விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இதுவரை பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், அவர்களது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டால், அவர்கள் வீதிக்கு வருவார்கள். நிலைமை கைமீறினால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ”என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.