;
Athirady Tamil News

லண்டன் திருமதி. ஆனந்தி அவர்களின் பிறந்தநாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..! (படங்கள்)

0

லண்டன் திருமதி ஆனந்தி அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்..! (படங்கள்)

திருமதி ஆனந்தி அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கியது. மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
#############################
லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை தலைவரும், சமூக சமயத் தொண்டருமான கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் கருணலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மூத்த மருமகளுமான லண்டனில் வதியும் திருமதி.ஆனந்தி கருணலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது..

வவுனியா கிராமமொன்றில் குறிப்பிட்ட குடும்பத்தின் சிறுவர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமதி ஆனந்தி அக்கா அவர்களது பிறந்தநாள் நிகழ்வை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் அலங்கரிக்கப்பட்டு பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி அகமகிழ்ந்து கொண்டாடினார்கள். பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது..

தொடர்ந்து இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக வருமானமிழந்து செய்வதறியாது, அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல், திகைத்து நிற்கும் நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாரதிபுரம்..சிவபுரம், சாம்பல்தோட்டம், கற்பகபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் கணவரை இழந்த குடும்பம்.. தனித்து வாழும் வயோதிபக் குடும்பம். குழந்தைத் தாய்மார் குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.