;
Athirady Tamil News

விண்வெளிக்கு மூன்றாவது முறையாக செல்லும் சுனிதா வில்லியம்ஸ்!

0

நாசா விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க வாழ் பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட்டில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப்பாதையில் செல்லும் ஆய்வகத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் முதல் பைலட்களில் ஒருவராக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.

மேலும், இந்த மிஷனை வரும் மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.

வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விண்வெளியில் அதிக முறை சென்ற பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா வில்லியம்ஸ், 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.