;
Athirady Tamil News

ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களின் இன்றைய தினம் நடைபெறும் இறுதிக்கிரிகை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றையதினம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் உள்ள முனியப்பர் ஆலய முன்றலில் அமரத்துவமடைந்த செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடி அத்தியாவசியத் தேவையான அரிசிப் பொதிகளுடனான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அமரத்துவமடைந்த செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அவரின் நினைவாக “நினைவுக் கஞ்சியும்” வழங்கி வைக்கப்பட்டது. இன்றைய மேற்படி நிகழ்வில் பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு குறிப்பாக பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கும் வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகள் அடங்கிய உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

வாழும் போது இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தவர்களால் மரணித்தும் மக்களை மறக்காது அறிய பணி செய்யும் அவர்களின் அயல்வீட்டு உறவுகளின் சமூகப் பணி போற்றத்தக்க செயலாகும்..

புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்தாலும் தாய் நாட்டையும் தன்னினத்தையும் மறக்காது வாழும் மனிதம் உள்ள மனிதர்களினால் மட்டுமே இவ்வாறான துன்பத்தில் இருக்கின்ற போதும் அதாவது இன்றையதினம் நடைபெறும் அமரர் இராசம்மா அம்மாவின் இறுதியாத்திரையின் போது தாய் நாட்டு மக்களின் வேதனையை புரிந்து கொண்டு அதனை போக்கும் வகையில். அமரத்துவமடைந்த இராசம்மா அன்னையின் நினைவாக, அன்னையின் இறுதிப் பயணததில் வன்னி எல்லைக் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள வழங்கி வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் பிரார்த்தித்து அன்னாரின் உறவுகளான அழகன் என அழைக்கப்படும் கனடாவில் வதியும் திரு.கந்தையா மதியழகன் குடும்பம் மற்றும் குழந்தை என அழைக்கப்படும் சுவிஸில் வதியும் திரு.வி. அருணாசலம் கைலாசநாதன் குடும்பம் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த செல்லம்மா என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.பரநிருபசிங்கம் இராசம்மா அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்தித்து ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களது நினைவாக நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரது உறவுகளுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
வவுனியா.

13.07.2022

ஊரதீவு அமரர்.இராசம்மா நினைவாக, உறவுகளினால் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.