;
Athirady Tamil News

பெரும் அழிவை ஏற்படுத்திய டெக்சாஸ் பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய டெக்சாஸ் பகுதியை ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னமும் பலரை காணாததால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுவரை வெள்ளத்தினால் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 161 பேர் காணவில்லை உயிரிழப்பு எதிரொலியாக இதை பேரிடராக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ட்ரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.