;
Athirady Tamil News

2-வது முறையாக உல்லாசத்துக்கு அழைத்து தாக்கியதால் கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டினேன்: கைதான பெண் வாக்குமூலம்!!

0

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் பிரகாஷ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரம்பூர் நாராயணா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த பிரகாசுக்கும் கொசப்பேட்டையை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பிரியா 2 மகன்களுடன் வசித்து வரும் நிலையில்தான் அப்பள கம்பெனியில் வேலை பார்த்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்து உள்ளது. இதைத் தொடர்ந்து பிரகாஷ், அடிக்கடி பிரியாவை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன்தினம் பிரகாஷ் பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துள்ளார். அங்கு பிரியாவை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில்தான் பிரகாஷ் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. ஆனால் பிரியா கொலையை மறைத்து நாடகமாடினார். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை நடந்த லாட்ஜிக்கு துணை கமிஷனர் கோபி, உதவி கமிஷனர் அரிகுமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் வழக்கு பதிவு செய்து பிரியாவிடம் தீவிரமாக விசாரித்தார். இதில்தான் பிரியா கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- எனக்கும் பிரகாசுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது பழக்கம் ஏற்பட்டது.

அவருக்கு திருமணமாகாததால் எங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்தோம். 4 குவார்ட்டர் மதுபாட்டில்களை பிரகாஷ் வாங்கி வந்தார். இதில் 1 குவார்ட்டர் மதுவை நான் குடித்தேன். மற்ற 3 பாட்டில்களையும் பிரகாஷ் குடித்தார். காலையில் ஒருமுறை இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் இரவில் போதை தலைக்கேறிய நிலையில் பிரகாஷ் மீண்டும் 2-வது முறையாக உல்லாசமாக இருக்கலாம் வா என்று அழைத்தார். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை.

நேரமாகி விட்டது அறையை காலி செய்து விட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று கூறினேன். ஆனால் பிரகாஷ் அதனை கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் என்னை உல்லாசத்துக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் இப்போது வேண்டாம் என்று கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நானும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டேன். நான் பிடித்து கீழே தள்ளியதில் பிரகாஷ் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

கொலை செய்ததை அறிந்ததும் அதில் இருந்து தப்பிக்க நாடகமாடினேன். இருவரும் சேர்ந்து மின் விசிறியில் தூக்குப்போட்டோம். இதில் பிரகாஷ் கீழே விழுந்து உயிரிழந்து விட்டார் என்று நம்ப வைத்து விடலாம் என்று நினைத்து அவ்வாறு செயல்பட்டேன். இவ்வாறு பிரியா வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் லாட்ஜில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரியமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.