;
Athirady Tamil News

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு

0

உக்ரைன் மீது ரஷ்யா ஏவும் ஏவுகணைகளானது போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ரஷ்யா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதனால் குறித்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தாலும் ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மேற்கத்திய நாடுகள்
இதற்கான அவசியம் இதுவரை ஏற்படாத நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாமென ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பாக போலந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரஷ்யா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால் அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும் இருப்பினும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

வளர்ச்சியும் பாதுகாப்பும்
ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புவதுடன் போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல் கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

அத்தோடு போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளதுடன் ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானதாக இருப்பதோடு நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து, ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளதுடன் மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.