;
Athirady Tamil News

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 13 பேர் பலி…!!

0

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. புல்ஹாத்- பைலா சாலையில் வாகனம் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டேராடூனில் இருந்து சுமார் 170 கி.மீட்டர் தொலைவில் உள்ள நெடுந்தூர பகுதி (remote area) என்பதால் மீட்புப்படையினரால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

உள்ளூர் மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடல்கள் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.