;
Athirady Tamil News

வேன் மரத்தில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி..!!

0

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இன்று (13) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

வென்னப்புவ, லுணுவில, ரோஸ் மரியவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், உயிரிழந்தவரின் 9 வயது பேரனும், மருமகனும் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து வென்னப்புவ, லுணுவில பகுதியை நோக்கி மூவர் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேனில் பயணித்த மூவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான தமது மகள் மற்றும் மனைவியைப் பார்க்கச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணம் செய்த வேளையிலேயே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.