;
Athirady Tamil News

சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ்!!

0

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 36 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த ஐவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபை தலைவர் திருமதி மங்கயற்கரசி, சாவகச்சேரி யூனியன் வெதுப்பகத்திற்கு அருகாமையில் செயற்பட்டுவரும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மூவர், சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த நபர் என ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தில் முதலில் ஐவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் மேலும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.