;
Athirady Tamil News

ஹக்கீம், ரிஷாட் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர் !!

0

2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இரண்டாம் வாசிப்பு இன்றையதினம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் ஆகிய இருவரும் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களின் தலைமையின் கீழிருக்கும் எம்.பிக்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட எம்.பியான எம்.எஸ்.தௌபீக் சமூகமளித்திருக்கவில்லை. எனினும், ஏனைய எம்.பிக்கள் மூவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பிக்கள் மூவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.