;
Athirady Tamil News

உக்ரைன் பிரச்சினை – அதிபர் புதின், அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை…!!

0

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.

கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைன் மீது படை எடுக்க 1.75 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிலைநிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறினார். ரஷ்யாவின் செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்.

ஆனால், ரஷ்யா அத்தகைய நோக்கத்தை மறுத்தது. உக்ரைன்தான் தன் சொந்த படைபலத்தைப் பெருக்கி வருவதாக கூறியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று காணொலி காட்சி வழியாக சந்திக்க உள்ளனர். அப்போது, உக்ரைன் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.