;
Athirady Tamil News

ஜப்பானில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு…!!

0

ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக ஜப்பான் நாட்டவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் இத்தாலியில் இருந்து டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த நபர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.