;
Athirady Tamil News

புலிகளின் சீருடை மற்றும் ஆயுதங்களுடன் மனித எலும்புகூடு மீட்பு!! (படங்கள்)

0

பளை – முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது தமிழீழ விடுதலைப்புலிகளுடைய என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பொருட்கள் தொடர்பில் பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரால் நீதிமன்றின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அகழ்வு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்ப்படுகின்றது.

ஆர்பிஜி உந்துகணை செலுத்தி உட்பட்ட வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளுடைய வரிச் சீருடை எச்சங்களும் மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் காணப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.