;
Athirady Tamil News

சீனாவில் தொழிற்சாலையில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு…!!

0

சீனாவின் கிழக்கே ஜியாங்சி மாகாண பகுதியில் நன்சாங் நகரில் ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று மாலை 3.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 4 பேர் கடுமையாக காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சிக்கிய 4 பேரில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 2 பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.