;
Athirady Tamil News

நீதவான் வீட்டில் கொள்ளை !!

0

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் நீதவான் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் நீதவானுக்கும் சிறுகாயங்கள் உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் நீதிபதியாக கடமையாற்றும் அக்கரைப்பற்று 8/1 முதலியார் வீதியில் வாழும் குறித்த நீதவானின், மனைவியின் சுமார் 11 – 1/2 பவுண் மதிக்கத்தக்க தாலி கொடியே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொள்ளையிட்டவரை மடக்கிப்பிடிக்க எத்தனித்த நீதவானும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.