;
Athirady Tamil News

சாவகச்சேரி இந்துக்கு அருகில் உருத்திரா தேவி மோதி மாணவன் உயிரிழப்பு!!

0

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்துடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இன்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் புகையிரத பாதையினை நடந்து கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் நாளைய தினம் பாடசாலையில் நடைபெறும் (சோர்சல்) நிகழ்வுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.