;
Athirady Tamil News

பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

0

அண்மையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண மருத்துவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 30.01.2022 அன்று சிறப்புற இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மகப்பேற்று பெண்ணியல் மருத்துவ நிபுணரும் பேராசிரியருமாக முகுந்தன் அவர்களும் சத்திரசிகிச்சை நிபுணரும் பேராசிரியருமான இராஜேந்திரா அவர்களும் பொது வைத்திய நிபுணரும் பேராசிரியருமான சுகந்தன் அவர்களும் நரம்பியல் வைத்திய நிபுணரும் பேராசிரியருமான அஜினி அரசலிங்கம் அவர்களும் கௌரவபடுத்தப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் வைத்திய நிபுணர்களும், வைத்திய அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.