;
Athirady Tamil News

28ஆம் திகதி மரக்கறிகள் கிடையாது !!

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் ஹர்த்தாலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், 28ஆம் திகதி மரக்கறி கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரக்கறி விவசாயியை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.