;
Athirady Tamil News

யாழிலிருந்து வெளியாகும் நாளாந்தப் பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!!

0

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் முன்னணிப் பத்திரிகைகளான வலம்புரி, யாழ். தினக்குரல், உதயன் ஆகிய பத்திரிகைகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை(01.5.2022) முதல் குறித்த மூன்று பத்திரிகைகளின்(தினசரி வெளியீடு) விலைகளும் தலா 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று பத்திரிகைகளினதும் ஞாயிறு வாரமலரின் விலை 60 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மூன்று பத்திரிகைகளின் விலைகளும் கடந்த சித்திரை மாத ஆரம்பத்தில் 30 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பத்திரிகைக்கான காகிதாகிகள், அச்சுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையே இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.