;
Athirady Tamil News

மோதலால் ஒருவர் உயிரிழப்பு !!

0

பயாகல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயாகல – மில்லகஸ் உடமுல்ல பிரதேசத்தில் நேற்றிரவு (8) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நபரை நாகொட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில், வைத்தியசாலைக்கு அழைத்துவருவதற்கு முன்பே அந்நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பயாகல, தங்வத்த அக்கரவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சன்ன சபரமாது என்கிற நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.