;
Athirady Tamil News

யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு.!! (வீடியோ, படங்கள்)

0

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில்வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்பிரியந்த லியனகே யின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் வெசாக் தானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது நிதானமாக ஐஸ்கிரீம் பானம் வழங்கிவைக்கப்பட்டது பல நூற்றுக்கணக்கான மக்கள் பற்றி சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது

அமேசான் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம் மற்றும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயம் என்பன மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

இன்று வெசாக் பௌர்ணமி தினமாகும். இதனையொட்டி நாடு முழுவதும் விசேட வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரச வெசாக் வைபவத்தை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இம்முறை வெசாக் பண்டிகை ஏப்ரல் மாத இறுதியில் மலர்ந்துள்ளதால், அதனுடன் இணைந்து வருகின்ற சர்வதேச தொழிலாளர் தினத்தை எதிர்வரும் ஏழாந்திகதிக்கு ஒத்திவைத்து, அரசாங்கம் வெசாக் பண்டிகையை இடையூறின்றிக் கொண்டாட வழிவகை செய்துள்ளது.

வெசாக் பண்டிகையையொட்டி கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 20 அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் ஐந்து வெசாக் வலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.