;
Athirady Tamil News

எரிபொருளை கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு !!

0

எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம், பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி இந்த பாதுகாப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என சாந்த சில்வா பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.