;
Athirady Tamil News

தமிழக முதலமைச்சரிடம் கஜேந்திரன் விடுத்துள்ள கோரிக்கை !!

0

தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (5) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபாட்டுவரும் இலங்கை தமிழ் உறவுகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் பலர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.