;
Athirady Tamil News

திண்டிவனம் பகுதியில் குவாரி லாரிகளில் தார்ப்பாய் மூடி செல்ல உத்தரவு..!!

0

திண்டிவனம் உட்கோட்ட போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா முன்னிலையில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனி பாபு தலைமையில் பிரம்மதேசம் போலீஸ் சரகத்தில் உள்ள அனைத்து கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து பேசினர்.

அப்போது லாரி டிரைவர்கள் குடிபோதையில் வாகனத்தை ஒட்டக் கூடாது. லாரியில் அளவுக்கதிகமாக பொருட்கள் ஏற்றக்கூடாது.

லாரியின் மீது தார்ப்பாய் கட்டாயம் போட்டு இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.