;
Athirady Tamil News

யாழில் இன்றும் பெட்ரோலுக்கு நீண்ட வரிசை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலையே விநியோகம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகனங்களுடன் காத்திருந்தனர்.

வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக , சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளில் பலரும் காத்திருந்தனர். சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நிற்கின்றன.

அதேவேளை மல்லாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலையில் 2 ஆயிரம் ரூபாய் மாத்திரமே விநியோகிக்க முடியும் என மட்டுப்படுத்திய அளவில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானோர் வரிசையில் நின்று இருந்தனர்.

இறுதியில் பெட்ரோல் கையிருப்பு குறைந்த நிலையில் வரிசையில் காத்திருந்தோருக்கு 500 ரூபாய்க்கே பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. இருந்த போதிலும் , இறுதியில் பெட்ரோல் நிறைவடைந்தமையால் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த பலருக்கு அங்கு பெற்றோல் கிடைக்கவில்லை.

நாளையும் யாழில் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.