;
Athirady Tamil News

அடுத்த வாரத்துக்கான மின்வெட்டு விவரம் !!

0

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை திங்கட்கிழமை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பகல் வேளையில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும், இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

ஜூலை 2 மற்றும் 3ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய தினங்களில் சீசீ வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேர மின்வெட்டும், எம்,என்,ஓ,எக்ஸ்,வை, ஸெட் ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டும் அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.