;
Athirady Tamil News

விவசாயிகளுக்கு உரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை !!

0

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள யூரியா உரத்தை சிறுபோக செய்கையில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிகாரிகளுடன் நேற்று (29) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த விவசாய அமைச்சர், ஒரு ஹெட்டயருக்கு 100 கிலோகிராம் வீதம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக பழங்களின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.