;
Athirady Tamil News

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் சஞ்சய் ராவத் – 10 மணி நேரம் கடந்த விசாரணை..!!

0

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கூடுதல் அவகாசம் கேட்டு சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார். இதனால் ஜூலை 1ம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.