;
Athirady Tamil News

வானிலை குறித்து சிவப்பு அறிவித்தல் வெளியானது !!

0

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

புத்தளம் முதல் பொத்துவில் ஊடாக கொழும்பு, காலி ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் அலைகள் 2.5 முதல் 3.5 மீற்றர்கள் வரை உயரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலஇடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.