;
Athirady Tamil News

குறைகின்றது விலை; மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

0

திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் சோறு, கறி மற்றும் சாதாரண தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளன.

எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காகவே விலைகளைக் குறைக்க தீர்மானித்ததாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சுமார் 60% உணவகங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கிடைப்பதன் மூலம் சில உணவகங்கள் தற்போது மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

10% முதல் 15% வரையிலான விலை குறைப்பு திங்கட்கிழமை அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.