;
Athirady Tamil News

பிஸ்கட் விலை அதிகரிப்புக்கு காரணம்!!

0

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் விலை அதிகரிப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணம் தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் கோதுமை மாவின் விலை 74 ரூபாவாக இருந்ததுடன், தற்போது இதன் விலை 290-300 ரூபாவாக காணப்படுகிறது. இது 277 சதவீத விலை உயர்வு என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.