;
Athirady Tamil News

சீ.ஐ.டியில் தடுத்து வைத்து விசாரணை !!

0

வசந்த முதலிகே உட்பட மூவர் மீதான விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சீ.ஐ.டி) பொறுப்பேற்றுள்ளதுடன், 72 மணி நேர தடுப்பு உத்தரவுகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.