;
Athirady Tamil News

தேசியமட்ட போட்டிக்கு புங்குடுதீவு மத்திய கல்லூரி தெரிவு!! ( படங்கள் இணைப்பு )

0

இன்றைய தினம் யாழ் / நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 20 வயதுப் பிரிவு பெண்களுக்கான மாகாணமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பெண்கள் அணி இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு முதல் தடவையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது .

முதலாவது போட்டியில் வவுனியா கனகராயன்குளம் வித்தியாலயத்தினை எதிர்கொண்டு ரை- பிரேக்கர் முறையில் வெற்றிகொண்டும் , இரண்டாவது போட்டியில் கிளிநொச்சி பிரமனாந்தாறு வித்தியாலத்தினை எதிர்கொண்டு 2 – 0 என்றவாறு வெற்றிபெற்றது . அரை இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை வித்தியாலயத்தினை எதிர்கொண்டு ரை- பிரேக்கர் முறையில் வெற்றிகொண்டு புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது . இறுதிப்போட்டியில் தெல்லிப்பழை மகாஜானா கல்லூரி அணியிடம் தோல்வியுற்றிருந்தாலும் தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.