;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக சரிவு..!!

0

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,369 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 6-ந் தேதி பாதிப்பு 4,417 ஆக இருந்தது. அதன்பிறகு 6 நாட்கள் கழித்து இன்று மீண்டும் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 364 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,178 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 ஆக உயர்ந்தது. தற்போது 46,347 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 829 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 13 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,185 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.