;
Athirady Tamil News

ஜனாதிபதி ஜப்பான் செல்கின்றார்!!

0

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (25) இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் ஜப்பான் செல்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட 217 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700 அதிதிகள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.