;
Athirady Tamil News

பிரமித்த பண்டாரவுக்குப் பைத்தியம் பிடிக்கும் !!

0

போராட்டங்களை மேற்கொள்ள பொலிஸாரின் அனுமதியைப் பெற வேண்டுமா? இல்லையா என்பதை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவரது அப்பா அல்லது தாத்தாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எழுதி கொடுப்பதை அப்படியே வாசித்தால் இறுதியில் பைத்தியமாகிவிடுவீர்கள் எனவும் பிரமித்தவை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

சுதந்திர மக்கள் சபையில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீதிமன்றங்களுக்கு கல்லெறியும் காலம் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எங்களது மாகாணத்தில் அமைச்சர்களை தலைக்கவசத்தைக் கொண்டு மக்கள் தாக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

எனவே, அரசாங்கத்தினர் இறுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களிலேயே ஓடியொழிய வேண்டிய நிலை ஏற்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாரோ இயக்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.