;
Athirady Tamil News

யாழில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு!! (PHOTOS)

0

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றினை நடாத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வானது யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனால் இந்த மாபெரும் தொழிற்சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்.தொழில் திணைக்களத்தின் உதவிச்செயலாளர் சஞ்சீபன் ,மாவட்ட இணைப்பாளர் கருணாகரன்,மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,தொழில் வழங்கும் தொழில் தரகர்கள்,தொழில் பெறுவதற்க்காக வந்த இளைஞர்கள் ,யுவதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.