;
Athirady Tamil News

கோப்பாயில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது ; ஐந்து வருடமாக போதைக்கு அடிமையாக உள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிப்பு!!

0

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் பகுதியில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் போது , தான் கடந்த ஐந்து வருட காலமாக போதைப்பொருளை அடிமையாகி உள்ளதாகவும் , அதிலிருந்து மீண்டு வர தன்னால் முடியாது உள்ளதால் தொடர்ந்து போதைப்பொருளை நுகர்ந்து வருவதாகவும் , ஆனந்தபுரம் பகுதியிலையே போதைப்பொருளை தன்னால் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.