;
Athirady Tamil News

யாழில். வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் ஹெரோயினுடன் கைது!

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் , மருந்து ஏற்றும் ஊசி (சிறின்ஸ்) தேசிக்காய் என்பவற்றுடன் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த இளைஞன் போதைக்கு அடிமையான நிலையில், வீட்டில் இருக்கும் பொருட்களை திருடி விற்று ,போதைப்பொருட்களை வாங்குவதாக விசாரணைகளில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்டையிலையே குறித்த இளைஞனை கைது செய்ததாகவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.