;
Athirady Tamil News

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி !!

0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட தேரர், 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.