;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட நாளின் 32வது நினைவேந்தல்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட நாளின் 32வது நினைவேந்தல் கரிநாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 4மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டிருந்தது.

வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் அவலநினைவலைகள் பகிரப்பட்ட தோடு, இதுவரை குறைந்தளவான முஸ்லீம் குடும்பங்களே மீள்குடியேறியதாகவும் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு இதுவரை பல அடிப்படை தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யபடவில்லை எனவும் சுட்டிகாட்டப்பட்டது.

இதன்போது யாழ் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளியின் தலைவர் சரவுல்அனாம், மௌலவி ஹக்கீம் ,மௌலவி அலியார் பைசர் காசிமி, யாழ் முஸ்லீம் ஒன்றிய தலைவர் ஆறிப் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.