;
Athirady Tamil News

மின்சார திருட்டில் ஈடுபட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!!

0

யாழ்ப்பாணத்தில் திருட்டு தனமாக மின்சாரம் பெற்ற இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , இலங்கை மின்சார சபையினர் பொலிஸாரின் உதவியுடன் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த நிலையில் , திருட்டு தனமாக மின்சாரத்தினை பெற்று பாவனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.