;
Athirady Tamil News

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

0

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் புதன்கிழமை(23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டது.

பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் தாக்கிய நபர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஆசிரியரை தாக்கிய பெற்றோர் கைது செய்யப்படவில்லை என்றால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ; ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய கும்பல்!!

யாழ் ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.