;
Athirady Tamil News

மோப்ப நாயுடன் சுற்றித் திரியும் பொலிஸார்..!

0

மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார் இன்று (8) முன்னெடுத்தனர்.

வடமாகாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் இன்று(08) அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள், பொது இடங்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா? என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.