;
Athirady Tamil News

அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் – இரவு வேளை மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞன்!

0

கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லடி விவேகானந்த பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்லடி பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் காத்தான்குடி காவல்துறையினரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் காவல்துறைமா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் காவல்துறை பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப காவல்துறை பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்களான பிரியங்கர (75812), பிரசன்ன (90669), நிமேஸ்(90699), பியுமகே (94143), சாரதி குணபால (19401), அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.