;
Athirady Tamil News

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை!!

0

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் தற்போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான சருமத்துடன் சேரும் சில இரசாயன பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களும் விற்பனையாவதால் உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப் பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.