;
Athirady Tamil News

திருடிய குற்றத்திற்காக 4 பேர் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு!!

0

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கையை துண்டித்த தலிபான்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு தடைகள் உள்ளிட்ட பலவித கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்துள்ளது. இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை என கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர்.இந்நிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் 9 பேர் சிக்கினர்.

அவர்களை கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது. பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை. மேலும், முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் கட்டவிழ்த்து விடுவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசிமி சுட்டி காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.