;
Athirady Tamil News

பரீட்சைகள் தினத்தில் மின் துண்டிப்பு வேண்டாம்!!

0

கல்வி ​பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட நாளில் கூட மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின் துண்டிப்பை உடனடியாக நிறுத்த ​வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர்தரப் பரீட்சை நடைபெறும்போதுகூட மின்சாரத்​தை வழங்க முடியவில்லை என்றால், இந்த அரசாங்கம் எந்தளவு மக்கள் விரோத அரசாங்கம் என்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் ​தெரிவித்தார்.

மின்சாரத்தைத் துண்டிப்பதற்கு எடுக்கப்பட்ட வெட்கமற்ற தீர்மானத்தை மீளப் பெற வேண்டும். இல்லை என்றால் இந்நாட்டு மக்களின் சாபத்திலிருந்து அரசாங்கத்தால் மீள முடியாது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.