;
Athirady Tamil News

வலுக்கும் உக்ரைன் யுத்தம்! ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!

0

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜப்போரிஜியா ஆகிய மாகாணங்களை திருப்பி அளிக்க முடியாது என்றார்.

இதில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போரினிடையே பொது வாக்கெடுப்பின் மூலம் உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது சட்டத்திற்கு புறம்பானது என மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.